districts

img

1961-இல் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை: தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்

தருமபுரி, செப்.19- ஒகேனக்கல் அருகே ராசிமணல் என்ற பகுதியில் புதிய அணை கட்டும் கோரிக்கை குறித்து, தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க்கில் உருவாகும் காவிரி ஆறு, குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டிற்கு வருகிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் ஆட்சிக்காலத்தில், மின்சாரம் பற்றாக்குறை காரணமாக 1961 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப் பட்ட திட்டம் ராசிமணல் அணை திட்டம். அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பின்னர் பல் வேறு காரணங்களுக்காக கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆர், ராசிமணலில் அணை கட்டுவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். தற்போது, தமிழ்நாட்டில் பாசன வசதியை பெருக்கவும், காவிரி ஆற்றின் உபரிநீர்  வீணாக கடலில் கலப்பதை தடுக்க வும், ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை விவ சாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம், பொதுச்செயலாளர் சாமி.நடராஜன், துணைத்தலைவர் வி.சுப்பிரமணியன், துணைச்செய லாளர் எஸ்.துரைராஜ், தருமபுரி மாவட் டச் செயலாளர் சோ.அருச்சுணன், தலை வர் எம்.குமார், கிருஷ்ணகிரி மாவட்டச்  செயலாளர் பிரகாஷ், மலைவாழ் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, செல்வம் ஆகி யோர் புதிய அணை கட்டுவது தொடர் பான சாத்திய கூறுகள் குறித்து, ராசி மணல் பகுதியில் புதனன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதிகமாக உபரிநீர் வரும் நிலை யில், அந்த நீரை சேமிக்க வாய்ப்பு இருக் கிறதா? என்ற விவாதம் தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. கர்நாடகாவிலும் அத்தகைய விவாதம் எழுந்துள்ளது. அதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்தும் வகை யில், ராசிமணலில் அணைகட்ட முடி யுமா? என்பது விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. காமராசர் ஆட்சிக் காலத்தில் ராசிமணலில் அணை கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட அடையாளங் கள் உள்ளன. அதன்பிறகு எம்ஜிஆர்  ஆட்சிக்காலத்தில் முயற்சி நடந்துள் ளது. எனவே, அணை கட்டுவதற் கான சாத்திய கூறுகள் குறித்து அரசு தெரிவிக்க வேண்டும் என்று விவசாயி கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.