தருமபுரி, மார்ச் 1- தருமபுரியில் ரயில் தண்டவாளம் அருகே உள்ள தளர்வான பாறைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகி றது. தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி ரயில் நிலையம் அருகே பெங்களூரு முதல் தருமபுரி வழியாக சேலம் செல் லும் ரயில் பாதை அமைந்துள்ளது. இந்த ரயில் பாதையின் வழியாக தினசரி ரயில் களும், வாராந்திர ரயில்களும் தில்லி, மும்பை, பூனே, பெங்களூரு, கன்னியா குமரி, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ரயில்கள் இயக்கப்படு கிறது. இந்த ரயில் பாதையில் சிவாடி ரயில் நிலையம் முதல் முத்தம்பட்டி ரயில் நிலையம் வரை உள்ள பாதை யில் இருபுறங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளது. இப் பகுதிகளில் மழைக்காலங்களில் ரயில் பாதையில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள் ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு கன மழையின் காரணமாக அதிகாலையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகள் ரயில்வே தண்டவாளத்தில் சரிந்ததின் காரணமாக அந்த மார்கத்தில் வந்த ரயில் விபத்தில் சிக்கியது. அப்போது ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் மிகப் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அப்போது முதல் தொடர்ந்து தளர் வாக உள்ள மலைப்பகுதியில் விரிசல் கள் அடைந்துள்ள பாறைகள், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட வற்றை தொடர்ந்து கண்டறிந்து முதற் கட்டமாக தற்போது 300 மீட்டர் தூரம் வரை அப்புறப்படுத்தும் பணி நடை பெற்று வருகிறது. இந்த ரயில் பாதை முழுவதும் மின்சார வழித்தடமாக மாற் றப்பட்டுள்ளதால், வரும் காலங்களில் ரயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிவு மற்றும் விபத்துக்கள் எதுவும் ஏற் படாத வண்ணம் அவற்றை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு வருகிறது.