districts

img

இளைஞர்கள் மீதான சாதி வெறியாட்டத்தை கண்டித்து தமிழ்ப்புலிகள்  கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

தருமபுரி தொப்பூர் அருகே தமிழ்ச்செல்வன், ஜீவா, சசிதரன் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் மீதான சாதி வெறியாட்டத்தை கண்டித்தும், சிறப்பு புலனாய்வு விசாரணை கோரியும் தமிழ்ப்புலிகள்  கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே வியாழனன்று (ஜூன் 16) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மே 17 ஒருஙகிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன் (விடுதலை தமிழ் புலிகள் கட்சி) உள்ளிட்ட பலர் பேசினர்.