districts

img

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து வேளாண்மை இணை இயக்குநர் எச்சரிக்கை

தருமபுரி, ஏப்.18-

தருமபுரி மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்க ளில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால், கடும் நடவடிக்கை  எடுக்கப்படும் என வேளாண்மை இணை இயக் குநர் வசந்த ரேகா எச்சரிக்கை விடுத்துள்ளர்.

இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக் குநர் வசந்த ரேகா வெளி யிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத்தில் தற்போது சாகு படி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவை யான உரங்களுக்கான யூரியா 3 ஆயிரத்து 673 மெட்ரிக் டன், டிஏபி ஆயிரத்து 234 மெட்ரிக் டன், பொட்டாஷ் ஆயிரத்து 541 மெட்ரிக் டன்  மற்றும் காம்பளக்ஸ் 4 ஆயிரத்து 640 மெட்ரிக் டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகி றது. அனைத்து உர விற்பனை நிலையங்களி லும், கடந்த ஆண்டு விலையிலேயே தற்போ தும் டிஏபி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் விற்பனை செய் யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரி வித்துள்ளது. உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம் விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும். உரங்க ளில் இருப்பு மற்றும் விலை விபரங்கள் அடங் கிய தகவல் பலகை தவறாமல் பராமரிக்க வேண்டும்.  

உர மூட்டைகளில் குறிப்பிட்டுள்ள அதிக பட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற் பனை செய்ய வேண்டும். இருப்பு பதிவேட்டில் உரங்களின் இருப்பு விபரங்கள் சரியாக பரா மரிக்க வேண்டும். அதிக விலைக்கு உர விற் பனை செய்வது தொடர்பாக புகார் ஏதும் பெறப்பட்டாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனை செய்தல் போன்ற நிகழ்வு ஆய்வின் போது கண்டறியப்பட்டாலோ கடும் நடவ டிக்கை எடுக்கப்படும். மேலும், உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

;