districts

img

தேர் கவிழ்ந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு

பென்னாகரம், ஜூன் 13-  தருமபுரி அருகே தேர் கவிழ்ந்த விபத் தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழா கடந்த 3  நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆண்டு தோறும் நடைபெறும் இந்த கோவில் திருவிழாவை 18 கிராம மக்கள் ஒன்றி ணைந்து நடத்தி வருகின்றனர். திருவிழா வின் முக்கிய நாளான திங்களன்று தேர் ஊர்வலம் நடைபெற்றது.  அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது, திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் சாய்ந்தது. அங்கு ஏராளமான மக்கள் கூடி இருந்ததால் தேர் விழுந்ததில் 5 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் மனோகரன், சர வணன் இருவர் படுகாயம் ஏற்பட்டு சிகிக் சைக்காக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். மேலும், மூவருக்கு  காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரு கில் இருந்த மக்கள் தேரை அப்புறப்ப டுத்தி, காயப்பட்டவர்களை மீட்டு, ஆம்பு லன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர்.