districts

img

அரசின் சேவைகள் உடனுக்குடன் மக்களுக்கு கிடைக்க நடவடிக்கை புதியதாக பொறுப்பேற்ற தருமபுரி ஆட்சியர் பேட்டி

தருமபுரி, ஜூன் 16- தருமபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி வியாழனன்று பொறுப்பேற்றுக் கொண் டார். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி  கூறுகையில், சேலம் பட்டு வளர்ச்சித்துறையின் இயக்கு நராக பணியாற்றி விட்டு தருமபுரி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ளேன். இதற்கு  முன்னர் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னையில் கதர் கிராம தொழில்வாரியத்தின் தலைமை  செயல் அலுவலராகவும், பின்னர், சேலம் பட்டு வளர்ச்சித் துறையின் இயக்குநராகவும் பணிபுரிந்தேன். தமிழக  முதல்வரின் உத்தரவின்படி, தருமபுரி மாவட்டத்தில் வரு வாய்த்துறையின் சார்பில் மக்களுக்கு வழங்கப்படுகின்ற அரசின் சேவைகள் அனைத்தும் மக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, துரிதபடுத்திட வும், விரைந்து கிடைத்திடவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.  தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின்  வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காகவும் அரசு செயல்படுத்தி வருகின்ற அனைத்து திட்டங்களையும் முழுமையாக  நிறை வேற்றி, தருமபுரி மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள எந்தவொரு தகுதியான நபரும் விடுபடாத வகை யில் அரசின் நலத்திட்டங்கள் முழுமையாக கொண்டு செல் லும் பொருட்டு என்னுடைய செயல்பாடுகள் இருக்கும். அதன்படி, மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்தி செல்வேன். அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், என் றார்.