விடுதலைப்போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியுமான தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு நிகழ்வு தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம், 123 தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.1லட்சத்து76 ஆயிரத்து150 ஐ, மாவட்ட செயலாளர் ஏ.குமார் வழங்கினார். இந்நிகழ்வின்போது, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிசுபாலன், மூத்த தோழர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, சி.நாகராசன், சோ.அருச்சுணன்,வே.விசுவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.