தஞ்சாவூர், மார்ச்.12 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்விற்கு வட்டத் தலைவர் கண.கல்யாணம் தலைமை வகித்தார். மதிப்புறு தலைவர் சு.க.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.ஆனந்தராஜ் வர வேற்றார். வட்ட இணைச் செயலா ளர் க.கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்டத் தணிக்கையாளர் பொ. சமுதாக்கனி, மாவட்ட இணைச் செயலாளர் சி.பிச்சை முத்து கருத்துரையாற்றினர். வட்டச் செயலாளர் இரா. அண்ணாதுரை வேலை அறிக்கையும், வட்டப் பொருளாளர் சோம. ஆறுமுகம் நிதிநிலை அறிக்கையும் சமர்ப் பித்தனர். வட்ட இணைச் செயலா ளர் இரா.புருஷோத்தமன், வட்டத் தணிக்கையாளர் இரா.இளஞ் சேரன் தீர்மானங்களை முன் மொழிந்து பேசினார். அதனை தொடர்ந்து மக ளிர் தினக் கருத்தரங்கம் நடை பெற்றது. தஞ்சாவூர் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி ஆசிரியர் போ.பிரீவா, பட்டுக்கோட்டை புனித இசெபல் பள்ளி மனநல ஆலோச கர் மா.நளினி, பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.சுமித்ரா, பட்டுக் கோட்டை மகப்பேறு மருத்துவர் எஸ்.ராஜராஜேஸ்வரி ஆகியோர் கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினர். ஓய்வூதியர் சங்க வட்ட இணைச் செயலாளர் ரெ.ஞானசூரி யன் நன்றி கூறினார்.