தஞ்சாவூர், டிச.9 - தஞ்சாவூர் ஆட்சிய ரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட செங்கரும்பு களை விவசாயிகள், மாவட்ட ஆட்சியரகத்துக்கு கையில் ஏந்தி வந்து முறை யிட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புத்தூர் நடுப்பட்டி, புளி யக்குடி வடக்குதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் செங்கரும்பு சாகுபடி செய்யப் பட்டு, ஒரு மாதத்தில் அறுவடை மேற்கொள்ளப்ப டும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலின்போது காற்றுடன் பெய்த மழை யால் செங்கரும்புகள் சாய்ந்துவிட்டன. ஏக்கருக்கு சுமார் ரூ.2.25 லட்சம் செலவு செய்துள்ள நிலையில், கரும்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால், வேளாண் துறையினரும், வருவாய்த் துறையினரும் ஆய்வு செய்து உரிய நிவா ரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப் பட்ட விவசாயிகள் செங் கரும்புகளுடன் வந்து மனு அளித்தனர்.