தஞ்சாவூர், செப்.29- பூதலூர் அருகே பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை, அசம்பாவி தங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு, இடித்து அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே செய்யாமங்கலத்தில் அரசு ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 2 ஆசிரியர் கள் பணியில் உள்ளனர். 30 குழந் தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இங்குள்ள பள் ளிக் கட்டடம், கடந்த 40 வருடங்க ளுக்கு முன்பு கட்டப்பட்ட நிலை யில், பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதை யடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் நடவடிக்கை யின் காரணமாக, தற்போது அரு கிலேயே புதிய கட்டடம் கட்டப் பட்டு அங்கு பள்ளி இயங்கி வருகிறது.
ஆபத்தான நிலையில் பழைய கட்டடம்
இந்நிலையில், ஏற்கனவே உள்ள பழைய கட்டிடம் பழுத டைந்து ஆபத்தான நிலையில், பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இந்த கட்டிடத்தைச் சுற்றி நான்கு புறமும் குடியிருப்புகள் உள்ளது. மேலும், இந்த வழியாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொது மக்கள் நடமாடும் இடமாகவும் உள் ளது. எனவே, தற்போது பயன் பாட்டில் இல்லாத பழைய பள்ளி கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது.
சிபிஎம் கோரிக்கை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலா ளர் எம்.ரமேஷ் மற்றும் சிபிஎம் மூத்த தலைவர் அரங்கராஜன் ஆகியோர், பழுதடைந்த நிலையில் பள்ளி உள்ள பள்ளி கட்டடத்தை பார்வை யிட்டனர். பின்னர் சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.ரமேஷ் கூறுகையில், “இந்த பழுதடைந்த கட்டிடத்தை உடனடியாக இடித்து அப்புறப் படுத்த வேண்டும். ஏற்கனவே, தமி ழக அரசு மாநிலம் முழுவதும், பழுத டைந்த நிலையில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டடத்தையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலை யில், ஊராட்சி ஒன்றிய ஆணையர் கள் அறிவுறுத்தலின்படி, இரு தினங்களுக்கு முன், பள்ளி கட்டி டத்தை இடிக்க வந்தவர்கள் இடத்தை பார்வையிட்டு, இது ஆதிதிரா விடர் நலத்துறையில் உள்ளதால் அவர்கள் அனுமதி பெற்ற பிறகு தான் இடிக்க முடியும் என திரும்பிச் சென்று விட்டனர். எனவே பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், நடமாடும் பகுதி யாக இருப்பதால் ஏதேனும் அசம் பாவிதம் நடைபெறும் முன்பாக இந்த கட்டடத்தை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகம், ஆதி திராவிடர் நலத்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என பொதுமக்கள் தரப்பில் இருந் தும் கோரிக்கை எழுந்துள்ளது.