தஞ்சாவூர், ஜூன் 11 - ராஜாமடம் 3 ஆம் நம்பர் பாசன கிளை வாய்க்காலைத் தூர்வாரித் தர வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வாலிபர் சங்க ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் செ.பெர்னாட்ஷா, ஒரத்த நாடு வட்டம் வெட்டிக்காடு பிரிவு பொதுப் பணித்துறை அலுவலக உதவிப் பொறி யாளரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு தாலுகாவிற்கு உட்பட்ட ஆழி வாய்க்கால் ஊராட்சி தெற்கு நத்தம் கிராமத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் என்பது பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாக உள்ளது. தெற்கு நத்தம் கிராமத்தில் சுமார் 800 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் பயன்பாட்டில் உள்ளது. இந்த விவசாய நிலங்களுக்கு, ராஜாமடம் 3 ஆம் நம்பர் பாசன வாய்க்காலில் வரும் ஆற்று நீரை நம்பியே விவசாயம் செய்து வரு கின்றனர். மேலும், சேதுராயன்குடிகாடு மற்றும் தென்னமநாடு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும், ராஜாமடம் 13 ஆம் நம்பர் கிளை வாய்க்காலின் ஆற்று நீரை நம்பித்தான் பிழைப்பு நடத்தி வரு கின்றனர். இந்த சூழ்நிலையில், கடந்த நான் காண்டுகளாக ராஜாமடம் 3 ஆம் நம்பர் பாசன வாய்க்காலில் தூர்வாரும் பணி கள் எதுவும் நடைபெறவில்லை. இதன் காரணமாக, பாசன வாய்க்கால் முழு வதும் கோரைப்புல்களும், காட்டுச் செடி களும் மண்டி பெரும் புதர்க்காடாக உள்ளது. இதனால் பாசன வாய்க்கா லில் நீர் தேக்கம் அடைந்து, இப்பகுதி விவசாயம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே இந்த பாசன வாய்க்காலை பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தூர்வாரும் பணியைத் தொ டங்கி விவசாயிகள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மேம்படுத்தி தர வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க ஒரத்தநாடு ஒன்றியத் தலைவர் ஜி.ஜெய்சங்கர், சிபிஎம் தெற்கு நத்தம் கிளைச் செயலாளர் எஸ்.செந்தில் குமார் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகி கள் உடனிருந்தனர்.