districts

img

வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடருக்கு வரவேற்பு

பட்டுக்கோட்டை/ மன்னார்குடி, நவ.1 - இந்திய தொழிற்சங்க மையம்  (சிஐடியு) 15 ஆவது மாநில மாநாடு கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 4, 5, 6 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது. சிஐடியு மாநில மாநாட்டிற்கான வெண்மணி தியாகி கள் நினைவுச் சுடர் பயணத்தை, கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் கீழ் வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி தொடங்கி வைத்தார். இந்த தொடர் பயணம் சிஐடியு மாநிலச் செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் கன்னியா குமரி செல்கிறது.  இந்த குழுவுக்கு பட்டுக்கோட் டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், உற்சாக வர வேற்பளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சிபிஎம் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமை  வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், சிஐடியு பொறுப்பாளர் ஞானசூரியன், தமு எகச முருக.சரவணன், விவசாயி கள் சங்க ஒன்றிய தலைவர் மகா லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மன்னார்குடி
சிஐடியு மாநில மாநாட்டில் ஏற்றப்பட உள்ள வெண்மணி தியா கிகள் நினைவுச் சுடர் திருத்துறைப்  பூண்டியில் பாட்டாளி வர்க்கத்தின் தலைவர் பி.எஸ்.ஆர். சிலையிலி ருந்து எடுத்து வரப்பட்டு ஆலத் தம்பாடி, கச்சனம், மாவூர், புலி வலம், திருவாரூர், விளமல், கமலா புரம், லெட்சுமாங்குடி ஆகிய ஊர் களின் வழியாக திங்கட்கிழமை மாலை மன்னார்குடி வந்தடைந் தது. சிஐடியு மாநில செயலாளர் சி. ஜெயபால் தலைமையில் வந்தி ருந்த வெண்மணி தியாகிகள் நினைவு சுடர் குழுவினருக்கு, திருவாரூர் மாவட்ட துணைத் தலை வர் ஜி.ரெகுபதி தலைமையில் பேருந்து நிலையம் எதிரில் வர வேற்பு அளிக்கப்பட்டது.  பின்னர் வரவேற்பு மற்றும் வழி யனுப்பு பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது. இச்சுடர் பயண கூட்டத்  தில் மாவட்டச் செயலாளர் டி.முரு கையன் துவக்க உரையாற்றினார். தொழிற்சங்கத்தின் மன்னார்குடி நகர் மூத்த தோழர் பி.சந்திரசேக ரன், அரசு போக்குவரத்து கழக  பொதுச் செயலாளர் ஏ.கோவிந்த ராஜ், நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் தங்கமணி ஆகியோர் பேசினர். சிஐடியு மாநில செயலா ளர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றி னார்.