districts

img

வ.உ.சிதம்பரனார் 150 ஆவது பிறந்த தினம்: தஞ்சையில் நடமாடும் புகைப்படக் கண்காட்சி

தஞ்சாவூர், ஏப்.12 - தஞ்சாவூரில் கப்ப லோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 150 ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்பட கண் காட்சி நடத்தப்பட்டு வருகிறது.  தஞ்சையில் நடமாடும் பேருந்தில் அமைக்கப்பட்டு உள்ள, புகைப்படக் கண்காட் சியை தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்து  பார்வையிட்டார். இக்கண்காட் சியில் சுதந்திரத்திற்காக பாடு பட்ட வ.உ.சி,யின் வர லாற்றில் இடம்பெற்ற, கோவை சிறையில் செக்கி ழுத்த காட்சி, சுதந்திரப் போராட்ட வீரர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு புகைப்படக் காட்சிகள் இடம்  பெற்றிருந்தன. மாவட்ட ஆட்சியருடன் பள்ளி மாணவ, மாணவிகள் கண் காட்சியை பார்வையிட்டனர். இந்த நடமாடும் பேருந்து கண்காட்சி மாவட்டம் முழுவதும் சுற்றி வர உள்ளது.  இதற்கான நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பிரேமலதா, வட்டாட்சியர் மணிகண்டன், முதன்மைக் கல்வி அலு வலர் சிவக்குமார், மாவட்ட  கல்வி அலுவலர் குழந்தை ராஜ் உள்ளிட்டோர் உடனிருந் தனர்.