தஞ்சாவூர், நவ.20- தாய்மொழி தமிழை பாது காப்போம். ஆரம்பக் கல்வி முதல் ஆட்சிமொழி வரை தமி ழில் வழங்க உறுதி ஏற்போம் என தனித்தமிழ் போராளி விருத்தாசலனார் நினைவு நாள் கருத்தரங்கில் உறுதி ஏற்கப்பட்டது. கரந்தை புலவர் கல்லூரி யின் முன்னாள் முதல்வர், தஞ்சையில் தமிழ்ப் புலவர் கல்லூரி நிறுவிய தனித்தமிழ் போராளி முனைவர் விருத்தா சலனாரின் 12 ஆவது ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம், தஞ்சாவூர் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திரு வருள் கல்லூரியில் நடைபெற் றது. கல்லூரி ஆட்சி குழுத் தலைவர் முனைவர் மு.இள முருகன் தலைமை வகித்தார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், சிபிஎம் மூத்த தலைவருமான டி.கே.ரெங்க ராஜன், ‘பொதுத்துறை நிறு வனங்கள் நேற்று, இன்று, நாளை’ என்ற தலைப்பில் பேசு கையில், “நாம் இக்கட்டான, சிக்கலான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கி றோம். சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில், இதுவரை இல்லாத புதிய பிரச்சனை களை சந்திக்க வேண்டி உள் ளது. இவற்றையெல்லாம் சந்திக்க நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வில்லை என்றால், இன்னும் 50 ஆண்டுகள் நாம் பின் னோக்கிச் செல்லக்கூடிய நிலை ஏற்படும். எதையெல் லாம் நாம் பெற்றோமோ அவற்றையெல்லாம் இழக்கக் கூடிய இடத்திற்கு நாம் வந்து விடுவோம். ஒரு பேராசிரியரிடம் பேசும் போது, மார்க்சிஸ்ட் கட்சி விரை வில் இல்லாமல் போய்விடும் என்று சொன்னார்.
பகவத் கீதை, குர்ஆன், பைபிள், வேதங்கள் இவையெல்லாம் அழியாமல் இருக்கும்போது, மார்க்சியம் மட்டும் எப்படி போய் விடும்? தத்துவங்கள் எப்போதும் அழியாது. மார்க் சியத்தை எவ்வாறு அணுகு வது என்பது குறித்து, புதிய வழிமுறைகளை கண்டறிய வேண்டும்” என்றார். நாகப்பட்டினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஜி. கே.நிஜாமுதீன், ‘மதச்சார் பின்மை’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். முன்ன தாக முனைவர் தமிழ்ச் செல்வன் வரவேற்றுப் பேசி னார். கல்லூரித் தாளாளர் விடுதலை வேந்தன் நன்றி கூறினார். நிகழ்வில், “முனைவர் விருத்தாசலனார் தமிழ் மீது அதிக பற்று கொண்டவர். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தமிழிலேயே கற்பிக்க வேண்டும். பெற் றோர்களும் தமிழ் வழி கல்வி யை ஆதரிக்க வேண்டும். குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும் என்று அயராது பாடுபட்டவர். புலவர் பட்டம் பெற்ற தமிழா சிரியர்களுக்கு வேலை வாய்ப்பு, சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கை களை போராடி பெற்றுத் தந்த வர். கல்லூரி படிப்பு முடித்த மாணவர்களுக்கு வழங்கப் படும் பட்டங்களில் ஆங்கில மொழி மட்டுமே இடம் பெற்று இருந்ததில், தமிழ் மொழியை யும் இடம் பெறச் செய்தவர். பல்கலைக்கழக துணைவேந் தர்கள் பட்டங்களில் தமிழில் கையெழுத்து இட வைத்தவர். சென்னை பல்கலைக்கழ கத்தின் இலட்சினை தமிழ் மொழியில் இருக்க வேண்டும் என்று போராடி இலச்சினை அமைத்து தந்த பெருமைக் குரியவர்” என போற்றினர்.