தஞ்சாவூர், அக்.21 - சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, பட்டுக் கோட்டை வழியாக இராமேஸ்வரத் திற்கு சிறப்பு விரைவு ரயில் சேவை அக்.23 (ஞாயிற்றுக்கிழமை) இரவு தொடங்குகிறது. திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக் குடி அகல ரயில் பாதை அமைக்கும் பணி கள் 2019 ஆம் ஆண்டு முடிவடைந்தது. அகல ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு, பட்டுக் கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பாக, சென்னைக்கு தினசரி விரைவு ரயில்களை இயக்க வேண்டும். மேலும், தீபாவளி, பொங்கல் பண்டிகைக் காலங்கள், மேல்மரு வத்தூர் ஆதிபராசக்தி ஆலய திருவிழாக் களுக்கும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து தென்னக ரயில்வேயிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தீபாவளி பண்டி கைக்கு தென்னக ரயில்வே சார்பில் சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இராமேஸ்வரத் திற்கும், மறுமார்க்கத்தில் இராமேஸ் வரத்தில் இருந்து தாம்பரத்திற்கும் 21 ரயில் பெட்டிகளுடன்கூடிய தீபாவளி சிறப்பு விரைவு ரயில் சிறப்பு கட்ட ணத்தில் இயக்கப்பட உள்ளது.
இந்த சிறப்பு ரயில் (வண்டி எண். 06041) அக்.23 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, சென்னை எழும்பூருக்கு இரவு 9.25 மணிக்கு வந்து, தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம் பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம் வழியாக, பட்டுக்கோட்டைக்கு திங்கள் ்கிழமை (தீபாவளி - அக்.24) அன்று அதிகாலை 05.03 மணிக்கு வரும். இதைத் தொடர்ந்து பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, இராமநாத புரம், மண்டபம் வழியாக இராமேஸ் வரத்தை அக். 24 திங்கள்கிழமை காலை 11 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் (வண்டி எண்.06042) மீண்டும் மறு மார்க்கத்தில் இராமேஸ்வரத்தில் அக்.24 (திங்கள்கிழமை) மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, பட்டுக்கோட் டைக்கு இரவு 9.05 மணிக்கு வந்த டைந்து, அக்.25 (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடையும். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விரைவு ரயிலை இயக்க நடவடிக்கை எடுத்த தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுக்கு பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர். மேலும், தொடர்ந்து சென்னையில் இருந்து இராமேஸ்வரத்திற்கு இத்தடத் தின் வழியாக இதுபோன்ற விரைவு ரயிலை இயக்க வேண்டும் எனவும் தென்னக ரயில்வேக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.