தஞ்சாவூர், ஏப்.7- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக குரூப்-4 பல்வேறு பணியிடங்களுக்குரிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பில் முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பு சலுகையும், இடஒதுக்கீடும் வழங்கப்பட்டுள் ளது. www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரி யில் 28.04.2022-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள், இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அதிகளவில் விண்ணப்பித்து பயனடையலாம். முன்னாள் படைவீரர்கள் பயன்பெறும் வகையில் இத்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்துடன் இணைந்து வழங்கப்பட வுள்ளது. எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள முன்னாள் படைவீரர்கள், அதன் விவரத்தினை தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலு வலகத்தில் தெரிவித்து, பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார்.