districts

img

வெண்மணி தியாகிகள் நினைவு சுடருக்கு தஞ்சையில் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர், ஆக.10 -  தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 17 ஆவது மாநில மாநாட்டையொட்டி, வெண்மணி தியாகிகள் நினைவு சுடர் பயணம் வெண்மணியில் துவங்கி, நாகை,  திருவாரூர் மாவட்டங்கள் வழியாக  தஞ்சாவூர் மாவட்டம், மாரியம்மன் கோவில் மின்வாரிய அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தடைந் தது.  அங்கு சுடர் பயணக் குழுவுக்கு, மின்  ஊழியர் மத்திய அமைப்பு, மாவட்ட சிஐ டியு, மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட தலைவர் து.கோவிந்தராஜூ தலைமை வகித்தார். சிஐடியு மாநிலச்  செயலாளர் சி.ஜெயபால் வாழ்த்திப்  பேசினார். பயணக் குழு தலைவர்கள்  எஸ்.அகஸ்டின், எஸ்.ராஜாராமன் ஆகி யோர் மாநாடு குறித்து விளக்க உரை யாற்றினர். பயணக் குழுவினருக்கு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல  அமைப்பு சார்பாக சால்வை அணிவித்து  கௌரவிக்கப்பட்டது.

;