தஞ்சாவூர், டிச.25- மகத்தான மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் துணைவியார் வெ.லீலா வதி அம்மா படத்திறப்பு, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே செங்கிப்பட்டி ஓவியா திருமண மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலா ளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினார். இதில், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பி னர் உ.வாசுகி, திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவு மான துரை.சந்திரசேகரன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கந்தர்வகோட்டை எம்எல்ஏவுமான எம்.சின்னத்துரை, முன்னாள் எம்எல்ஏ எம்.ரெத்தினசாமி, ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் எம்.தவமணி, ஒன்றியப் பெருந்தலைவர் கல்லணை செல்லக் கண்ணு, சிபிஎம் மூத்த தலைவர் என்.சீனி வாசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன், மாநில நிர்வாகி முகமது அலி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், சிபிஎம் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், வி.ச.செய லாளர் கே.தமிழரசன், சிபிஎம் திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் எம்.ஜெயசீலன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் து.செல்வம், சிபிஐ மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.