districts

மாயமான வாகனத்தை பயன்படுத்திய காவலர் மீது நடவடிக்கை கோரி புகார்

தஞ்சாவூர், நவ.19 - கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வேட்டைக்குடி பகுதியைச் சேர்ந்த வர் விவசாயத் தொழிலாளி வெற்றிவேல் (40).  இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம்  தேதி டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்டிஆர் 160 என  சிவப்பு கலர் இருசக்கர வாகனத்தை வாங்கி,  டி.என்.91, டி.1143 என்ற பதிவு எண்ணுடன் பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இரவு சாவடிக்குப்பத்தில் உள்ள  தனது சகோதரர் வீட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் டிச.11 ஆம் தேதி வீட்டு வாச லில் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த  வெற்றிவேல், விருத்தாச்சலம் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப் பதிந்து ரசீது வழங்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் அவரின் மொபைல் எண்ணிற்கு, ‘இருசக்கர வாகனத் தில் செல்லும் போது தலைக்கவசம் அணிய வில்லை’; நூறு ரூபாய் அபராதம் செலுத்த  வேண்டும்’ என நாகப்பட்டினம் காவல்துறை யினர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த வெற்றி வேல், தனது நண்பர்களுடன் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் சில நாட்கள் தேடி யுள்ளார். அப்போது, வாய்மேடு காவல்நிலை யத்தில் பணியாற்றும் காவலர் சுரேஷ் என்ப வர் இருசக்கர வாகனத்தை வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் காவலர் என்ப தால் பயந்து போய்,  வாகனம் குறித்து  வெற்றிவேல் அவரிடம் எதுவும் கேட்க வில்லை. இதைத்தொடர்ந்து, வெள்ளிக்கிழமை தஞ்சாவூர் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு வந்த  வெற்றிவேல், தனது இருசக்கர வாகனத்தை காவலர் பயன்படுத்தும் போட்டோ ஆதாரங்க ளுடன் டி.ஐ.ஜி. கயல்விழியிடம் புகார் அளித்து, “தனது வாகனத்தை உடனே மீட்டுத்  தர வேண்டும். மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும். திருட்டு வாகனத்தை பயன் படுத்திய காவலர் மீதும் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும்” என புகார் அளித்துள்ளார்.

;