தஞ்சாவூர், ஜூன் 12- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றியம் ஆம்பலாப்பட்டு சிவக் கொல்லை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கக் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராகவேந்தர் தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை. ஏசுராஜா, ஒரத்தநாடு ஒன்றியச் செயலாளர் செ. பெர்னாட்ஷா, ஒன்றியத் தலைவர் கோ. மாஸ்கோ ஆகியோர் பேசினர். கிளை யின் புதிய தலைவராக ராகவேந்தர், செயலாளராக பாஸ்கர், பொருளாள ராக சினேகா, துணைத் தலைவர் வைத் தீஸ்வரன், துணைச் செயலாளராக சக்தி வேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட னர். ஆம்பலாப்பட்டு - சிவக்கொல்லை ஆதிதிராவிடர் தெரு சுடுகாடு சம்பந்த மாக அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத, ஒரத்த நாடு ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து, ஜூன் 21 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூதனப் போராட்டம் நடத்துவது. ஆம்பலாப் பட்டு சிவக்கொல்லை 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்து, ஆபத் தான நிலையில் உள்ளது. அதை உட னடியாக அகற்றி புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டும். பழுதடைந்துள்ள கப்பி சாலைகளை தார்ச் சாலைகளாக மாற்றித் தர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.