districts

img

உண்டி கோல் போட்டி

கும்பகோணம், பிப்.6- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யா லயா பள்ளியில் மாநில அளவில் கிராமங்களில் சிறுவர்கள் விளையாடவும் முன்னோர்கள் காட்டில் தற்காப்பிற்கு வேட்டையாடவும் உபயோகித்த (கல்டா பெல்ட்) எனும்  உண்டி கோல் போட்டி நடைபெற்றது. போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி யர்கள் கலந்து கொண்டனர். வயதின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக நடைபெற்றது. இதல், ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஐந்து முறைகள் வழங்கப்பட்டன. ஐந்து முறைகளில் அதிக முறை வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கமும், இரண்டாவதாக வெற்றி பெற்றவர் களுக்கு வெள்ளி பதக்கமும், மூன்றாவதாக வெற்றி பெற்ற வர்களுக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டன.  கார்த்தி வித்யாலயா பள்ளி தாளாளர் எஸ்.ஏ.கார்த்தி கேயன், பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்தி கேயன் போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பாராட்டு  சான்றிதழை வழங்கினர்.