தஞ்சாவூர், பிப்.10- தஞ்சாவூர் மாநகராட்சி கல்லுக் குளம் மக்கள் மன்றம் அருகே, திமுக இளைஞரணி செயலாளரும், சேப் பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் தஞ்சை மாநகராட்சி யில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் இ. வசந்தி (36 ஆவது வார்டு), எம்.வைஜெயந்தி மாலா (35 ஆவது வார்டு) மற்றும் திமுக, கூட்டணிக் கட்சி வேட்பா ளர்களை ஆதரித்து திறந்த வேனில் நின்றபடி பேசினார். பிரச்சாரத்தில், திமுக எம்எல்ஏக் கள், துரை.சந்திரசேகரன் (திருவை யாறு), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சா வூர்), சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ். தமிழ்செல்வி, பி.செந்தில் குமார், என்.வி.கண்ணன், ஆர்.கலைச் செல்வி, மாவட்ட குழு உறுப்பினர் என். சரவணன், நகரக் குழு உறுப்பி னர்கள் ராஜன், கரிகாலன், வின்சிலா, பைந்தமிழ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் த. முருகேசன், கிளைச் செயலாளர்கள், நகரக் குழு உறுப்பி னர்கள் மற்றும் திமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணம் காந்தி பார்க் அருகில் கும்பகோணம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 24 பெண் வேட்பாளர்கள் உட்பட 48 வேட்பா ளர்களை அறிமுகப்படுத்தி ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கும்பகோணம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் நகராட்சி தரம் உயர்த்தப்பட்டு மாநக ராட்சியாக தமிழக முதல்வர் அறி வித்தார். அதன் தொடர்ச்சியாக முதல்முறையாக கும்பகோணம் மாநகராட்சி தேர்தலை சந்திக்கிறது. இதற்கு தமிழகத்தில் நல்லாட்சியை கொடுத்த நீங்கள் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு உள்ளாட்சியில் வெற்றி பெற செய்ய வேண்டும். வேட்பாளர்கள் அறிமுக கூட்டத் தில் திமுக மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராம லிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், மாநகர செய லாளர் சுப.தமிழழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 34 வது வார்டு வேட்பா ளர் செல்வம் உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சியினரும் கலந்து கொண்டனர்.
பாபநாசம்
தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை, பாபநாசம் பாபநாசம் அண்ணா சிலை அருகில் திமுக இளை ஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் புதனன்று பிரச்சாரம் செய்தார். இதில் திமுக ஒன்றியப் பொறுப்பா ளர் வடக்கு தாமரைச் செல்வன், அம்மாப் பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன், சிபிஎம் மாவட்டக் குழு காதர் ஹீசைன், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் முரளிதரன், விடுதலைச் சிறுத்தை கள் கட்சி மாவட்டச் செயலாளர் பொறுப்பு உறவழகன் பலர் பங்கேற்றனர்.