கும்பகோணம், மார்ச் 8- தமிழ்நாட்டில் பொது போக்குவரத்தை பாதுகாத்திடவும் அரசு உடைமையாக் கப்பட்ட போக்குவரத்தை தனியாருக்கு தாரைவார்க்க திட்டமிடும் போக்கை தடுத்து நிறுத்திடவும் போக்குவரத்து தொழி லாளர்களின் நியாயமான கோரிக்கை களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலி யுறுத்தி அரசு போக்குவரத்து தொழிலா ளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங் கம் உள்ளிட்ட சங்கங்கள் இணைந்து கும்ப கோணத்தில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட னர். பின்னர், கும்பகோணம் அரசு போக்கு வரத்து தலைமையகம் முன்பு பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க துணை தலைவர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். கும்பகோணம் மண்டலத் தலை வர் காரல் மார்க்ஸ், பொதுச்செயலாளர் ஜி. மணிமாறன், சாலைப் போக்குவரத்து சம் மேளன மாநிலப் பொருளாளர் பார்த்த சாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
பொன்னமராவதி
பொன்னமராவதியில் அரசு போக்கு வரத்து கழக பணிமனை முன்பு நடை பெற்ற பிரச்சாரத்திற்கு துணைத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். பொருளா ளர் ரவிச்சந்திரன், செயலாளர் பாலமுரு கன், பொதுச்செயலாளர் மணிமாறன், சிஐ டியு மாவட்ட தலைவர் முகமது அலி ஜின்னா, மாவட்டப் பொருளாளர் பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.