தஞ்சாவூர், நவ.16 - சிறுவர் விளையாட்டு பூங்கா மதுக்கூடமாக மாறிவிட்டது. இரவு பகல் எந்நேரமும், ரவுடிகள் அமர்ந்து, மது அருந்தி விட்டு, சச்சரவில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி, காவல்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாநகராட்சி மருத்து வக் கல்லூரி சாலை, திரிபுரசுந்தரி நகரில், மாநகராட்சி சிறுவர் விளை யாட்டு பூங்கா உள்ளது. இந்தப் பூங்காவில் காலை, மாலை நேரங்க ளிலும், விடுமுறை நாட்களிலும் பெண்கள், குழந்தைகள் அதிகள வில் வந்து செல்கின்றனர். மேலும் அப்பகுதி பெண்கள், ஆண்கள், முதியோர் நடைபயிற்சி, உடற் பயிற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இரவு, பகல் எந்நேரமும் ரவுடிகள் சிலர் அமர்ந்து கொண்டு மது அருந்து வதும், உணவுப் பொருட்களை சாப்பிட்டு விட்டு, அப்படியே மதுப் பாட்டில்களையும், உணவு கழிவு களையும் வீசிச் செல்வதும், ஆபாச மான வார்த்தைகளை பேசி சச்சர வில் ஈடுபடுவதும் வழக்கமாக உள் ளது. மேலும், ஆடைகள் அவிழ்ந்து அருவருக்கத்தக்க நிலையில், மது போதையில் அங்கேயே படுத்து விடுகின்றனர். இந்த சிறுவர் விளையாட்டு பூங்கா அருகிலேயே பிள்ளையார் கோயில் உள்ளது. திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மத்திய மாவட்டச் செயலாளரு மான துரை.சந்திரசேகரன் வீடும் மிக அருகில் உள்ளது. மேலும் இதன் எதிரே மருத்துவமனையும் உள்ளது. இந்த பூங்கா எந்த நேரமும் மதுப் பிரியர்களின் ஆக்கிரமிப்பில் இருப்பதால், பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவ தற்கு அச்சப்படும் சூழ்நிலை உள் ளது. இப்பகுதியில் வசித்து வரும் மருத்துவர்கள் மற்றும் பொதுமக் கள், பெண்கள், முதியவர்கள் நடை பயிற்சி செய்ய அச்சப்பட்டு பூங்கா விற்கு வருவதையே தவிர்க்கின்ற னர். எனவே, இந்த இடத்தில் மாநக ராட்சி மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து, மது அருந்தி விட்டு சச்சரவில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்காவை சிறு வர்கள், பெண்கள், குழந்தைகள் வந்து செல்லும் இடமாகவும், நடை பயிற்சி செய்யும் இடமாகவும் மீண் டும் மாற்றி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மருத்துவக் கல்லூரி சாலை கிளைச் செயலாளர் ராஜா மற்றும் பொது மக்கள் கேட்டுக் கொண்டுள்ள னர்.