தஞ்சாவூர், மார்ச்.10- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த தளிக்கோட்டை பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் காம ராஜ். இவர் ஆத்திக்கோட்டை ஒயின்ஷாப் அருகே நசுவினி ஆற்று பாலத்தின் கீழ் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டி ருந்தார். அப்போது அவரது காலில் கூர்மையான ஏதோ ஒன்று குத்தியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, இதையடுத்து, காலில் குத்திய அந்த பொருளை வெளியில் எடுத்து பார்த்தபோது, அது சுமார் இரண்டடி நீளமுள்ள வேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து, காமராஜ் யாருக்கும் தெரியாமல் அதைக் கொண்டு வந்து தனது வீட்டில் வைத்துள்ளார். இதுகுறித்து சிலர் தளிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகத் திற்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்கு சென்ற கிராம நிர்வாக அலுவலர் ஆறு முகம் வேலை மீட்டு, வருவாய் ஆய்வாளர் சாந்தி முன்னிலை யில், பட்டுக்கோட்டை மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ண மூர்த்தியிடம் ஒப்படைத்தார். தற்போது வட்டாட்சியர் அலுவலகத்தில், பாதுகாப்பு டன் வைக்கப்பட்டுள்ள, சுமார் இரண்டடி நீளம் உள்ள வேல், ஐம்பொன்னால் செய்யப்பட்டி ருக்கலாம் எனக் கூறப்படு கிறது. இந்த வேல், ஆற்றுப் பகுதிக்கு எப்படி வந்தது. அருகில் உள்ள கோயில்களில் இருந்து திருடப்பட்டதா அல்லது பழமையான விலை மதிப்பற்ற வேலா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.