தஞ்சாவூர், டிச.27- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரத்தில், மாவட்ட ஆட்சியரின் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். தஞ்சாவூர் கலால் உதவி ஆணை யரும், பட்டுக்கோட்டை வருவாய் கோட் டாட்சியருமான (பொ) கோ.பழனிவேல் வர வேற்றார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்திரா, பேராவூரணி சட்டமன்ற உறுப்பி னர் என்.அசோக்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தார். இவ்விழாவில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு, மாதாந் திர உதவித் தொகை ரூபாய் ஆயிரம் வழங்கு வதற்கான ஆணை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 380 பயனாளி களுக்கு விலையில்லா வீட்டு மனைப் பட்டா, 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, வேளாண்மை துறை சார்பில் 8 பயனாளி களுக்கு மானியத்தில் வேளாண் பொருட் கள், ஊரக வளர்ச்சி துறை சார்பில் 20 மக ளிர் சுய உதவிகளுக்கு கடன் உதவி, தோட் டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு இடு பொருட்கள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு பவர் டில் லர் என மொத்தம் ரூ.1,85,15,583 மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னதாக அங்கு அமைக்கப்பட்டி ருந்த கண்காட்சியை ஆட்சியர் குத்து விளக் கேற்றி தொடங்கி வைத்தார். மாணவர் களின் சிலம்பாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி, மனோ ராவில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர், கடலோர கிராமங்களை இயற்கை சீற்றங்களில் இருந்து பாது காக்கும் வகையில் ‘ஆழிவனம்’ என்ற ழைக்கப்படும் அலையாத்திக் காடுகளை ஏற்படுத்தும் வகையில் சுமார் 2 ஆயிரம் சுரபுன்னை செடிகளை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இப்பகுதியில், வனத்துறை, ஓம்கார் பவுண்டேஷன், மாவட்ட பசுமைக்குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம் சார்பில், செஞ்சிலுவைச் சங்கம், நாட்டு நலப்பணித் திட்டம், ரோட்டரி சங்கம், அரிமா சங்கம், இளைஞர் அமைப்புகள் இணைந்து, சுமார் 25 ஆயிரம் சுரபுன்னை செடிகளை நட உள்ளனர். தொடர்ந்து, மனோராவில் மேற்கொள் ளப்பட்டு வரும் அரசு அலுவலர் பயிற்சி மையக் கட்டிடத்தின் கட்டுமானப் பணி, படகு குழாம், உணவகம், சிறுவர் பூங்கா ஆகிய இடங்களை ஆய்வு செய்தார். பின்னர் கழனிவாசல் ஊராட்சி, கொரட்டூர் கிராமத்தில், பசுமையை பரா மரிக்கும் வகையில், “ஊருக்கு ஒரு வனம்” என்ற திட்டத்தின் கீழ், ஒரு ஏக்கர் பரப்பள வில் 100 தென்னை மரங்கள், மா, பலா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட ஆயிரம் பழக்கன்றுகள் நடும் திட்டத்தை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.