districts

img

தமிழ்க்கலை மரபினை வளர்க்க தமிழ்ப் பல்கலை. - நார்வே கலாசாதனா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர், செப். 20 -  தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உரு வாக்கப்பட்டுள்ள, தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் நார்வே கலாசாதனா நிறு வனம் தர வகுப்புகள் மற்றும் சான்றி தழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற் குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.  நார்வே கலாசாதனா நிறுவனம்  தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் நோக் கில், தமிழ் இலக்கியப் பாடல்களை இசை, நாட்டிய வடிவமாக்கி பல்வேறு  நாடுகளில் அரங்கேற்றி வருகிறது.  இவ்வகையில், தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பின்னர் இதுகுறித்து துணை வேந்தர் வி.திருவள்ளுவன் கூறுகை யில், “நார்வே மற்றும் ஐரோப்பிய நாடு களில் தமிழிசையையும், தமிழ் நாட்டிய  மரபினையும் மற்றும் தமிழர் கலை களையும் கற்பிக்கும் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றும் வகையில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துள் ளது.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மூலம் நடத்தப் பெறும் குரலிசை, கருவியிசை, பரத நாட்டியம், நாட்டுப்புறக்கலைகள், சிலம் பாட்டம் ஆகிய பாடப்பிரிவுகள் நார்வே  கலாசாதனா நிறுவனத்தின் வாயிலாக  நடத்தப் பெற்று தமிழ்ப் பல்கலைக் கழகம் வழி தேர்வுகள் நடத்தவும் சான்றி தழ் வழங்கவும் வகை செய்யப்படும்” என்றார். தமிழ்ப் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) முனைவர் சி.தியாகராஜன், நார்வே கலாசாதனா நிறுவன இயக்கு நர் கவிதா லட்சுமி ஆகியோர் இப்புரிந்து ணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் முனை வர் க.திலகவதி, இணை இயக்குநர் முனைவர் செ.கற்பகம், உதவிப் பதிவா ளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.

;