கும்பகோணம், ஜன.8 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் பயன்படுத் தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் வகுப்புகளுக்கு தரைத்தளம் அமைத்து தர அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தராஜன் சென்னை தனியார் நிறுவ னத்திடம் பள்ளியை புனரமைப்பு செய்திட கோ ரிக்கை வைத்தார். அதன் பெயரில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாக அனுமதியுடன், லினாக்ஸ் இந்தியா டெக்னாலஜி சென்டர் என்கின்ற சென்னையை சேர்ந்த தனியார் நிறு வனம் தலைமையாசிரியரின் நல்லெண்ண கோரிக்கையை ஏற்று, குறிச்சிமலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் அனைத்து வகுப்பறைகளுக்கும் மாணவர்கள் நலன் கருதி ரூ.3,07,500 மதிப்பீட்டில் தரைத்தளத் தில் சலவைக்கல் பதித்தும், சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் (R.O) ரூ.1,42,600 மதிப்பீட் டில் வசதி செய்து கொடுத்தனர். மாணவர்களுக்கு உதவிய சென்னை Lennox India Technology centre private limited நிறுவனத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா வெள்ளிக்கிழமை குறிச்சிமலை ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் பத்மினி தலைமை யில் நடைபெற்றது. மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் முன்னி லையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஜி.கே. எம்.ராஜா கலந்து கொண்டனர். முன்னதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ம.கோவிந் தராஜன் வரவேற்றார்.