districts

img

ஊராட்சிகளை மேம்படுத்த சிறப்பு கிராம சபைக் கூட்டம்

தஞ்சாவூர், ஏப்.24 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம், குருவிக்கரம்பை ஊராட்சியில், கிராம ஊராட்சி வளர்ச்சி  திட்டம், வளர்ச்சிக்கான இலக்குகள் குறித்து சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சி யர் ஸ்ரீகாந்த், நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், எம்எல்ஏ அசோக் குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுவாதி காமராஜ், மூர்த்தி, ஒன்றியப்  பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக் கம், ஊராட்சி மன்றத் தலைவர் வைரவன்,  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் துறையினர், வேளாண் துறை  அலுவலர்கள் உள்பட பல்வேறு துறை களின் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராம சபைக்  கூட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள்  குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

ஆத்திக்கோட்டை 
பட்டுக்கோட்டை வட்டாரம் ஆத்திக் கோட்டை ஒன்றியத்தில் சிறப்பு கிராம  சபைக் கூட்டம் (ஏப்.24) ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. தேசிய பஞ்சா யத்து ராஜ் தினத்தை முன்னிட்டு நடை பெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை மற்றும் பல துறை அலுவலர்கள் கலந்து கொண் டனர். இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வைக்கப் பட்ட கருத்துக் காட்சியினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர் பார்வையிட்டனர்

பாபநாசம்
அய்யம்பேட்டை அருகே ரெகுநாத புரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிறன்று நடந்தது. இதில் சுற்றுப்புறத் தூய்மை, வறுமை யில்லா ஊராட்சி, நீர் மேலாண்மை, இயற்கை வளங்கள் பாதுகாத்தல், அனைவருக்கும் குடியிருக்க மலி வான பாதுகாப்பான வீடு, தகுதியு டைய அனைவருக்கும் சமூக பாதுகாப் புத் திட்டம் உள்ளிட்ட பொருள்கள்  அடிப்படையில் விவாதம் நடைபெற்றது.  பாபநாசத்தை அடுத்த ராஜகிரியில் நடை பெற்ற கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலை வர் சமீமா பர்வீன் முபாரக் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கோபுராஜபுரத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணன்  தலைமை வகித்தார். அம்மாப்பேட் டையை அடுத்த சாலியமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலை வர் சக்தி, அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கலைச் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்
திருவாரூரையடுத்த புலிவலம் ஊராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ் ணன் கலந்து கொண்டார். நாகை நாடா ளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

பெயரளவுக்கு நடந்த கூட்டம்
பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் தேசிய பஞ்சா யத்து ராஜ் தினத்தை முன்னிட்டு ஊரக  வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்கு கள் குறித்த சிறப்பு கிராம சபை  கூட்டங்கள் நடைபெற்றன. இதில்  பொதுமக்கள் குறைவான எண்ணிக்கை யிலேயே கலந்து கொண்டனர். பல ஊராட்சிகளில் 15-க்கும் குறைவான பொதுமக்களே கலந்து கொண்டனர். வரும் காலங்களில் கிராமசபை கூட்டங் கள் குறித்தான பயன்கள், அறிவிப்பு களை விரிவான அளவில் பொதுமக்களி டம் கொண்டு சேர்க்க அரசு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.