கும்பகோணம், மார்ச் 13- தஞ்சை மாவட்டம் திரு புவனத்தில் பட்டு கூட்டுறவு சங்கங்களில் அங்கத்தினர் களாக உள்ள நெசவாளர் களுக்கு ஒன்றிய அரசின் கைத்தறி வளர்ச்சிக் கழ கத்தின் மூலம் கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி பயிற்சி அளிக்கப்பட்டது. ஒரு நெசவாளருக்கு 45 நாட்கள் பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.350 அலவன்ஸ் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், பயிற்சி பெற்ற 60 நெசவாளர்களுக்கு பயிற்சி காலத்திற்கான உதவித் தொகை ஒன்றை ஆண்டு களாகியும் வழங்கப்பட வில்லை. இதுகுறித்து நெச வாளர்கள் பல முறை உதவி இயக்குநரிடம் கடிதம் அளித் தும் இன்று வரை உதவித் தொகை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக கைத் தறி பயிற்சி பெற்ற நெசவா ளர்கள் மற்றும் கைத்தறி சம்மேளனம் (சிஐடியு) சார் பில் அரசு கைத்தறி துணி நூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் மனு அளிக் கப்பட்டது. நிகழ்வில் கைத்தறி பயிற்சி நெசவாளர்கள் சம் மேளன துணைத் தலைவர் என்.பி.நாகேந்திரன், சிஐ டியு தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் சேகர், பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.