கும்பகோணம், ஜன.10- தமிழகத்தில் அனைவ ருக்கும் கல்வி என்ற நிலை யை உருவாக்கவும், குடும் பச் சூழல் காரணமாக இடை நின்ற குழந்தைகள், மாற் றுத்திறன் குழந்தைகள் ஆகிய பள்ளி செல்லாக் குழந்தைகள் கண்டறியப் பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு வருகின்ற னர். தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றி யத்திற்கு உட்பட்ட திருப்ப னந்தாள், ஒழுகுச்சேரி, கோணுளாம்பள்ளம், ஆர லூர், பாலாகுடி ஆகிய ஊராட்சி களில் பள்ளி செல்லா குழந் தைகள் உள்ளனரா என குழந்தைகள் நல பாது காப்புத் துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடன் இணைந்து களப்பணி மேற்கொள்ளப் பட்டது. இப்பணியில் பள்ளி இடைநின்ற 30 குழந்தைகள் இருப்பது கண்டறியப்பட் டது. உடனே அந்த மாண வர்களிடமும், அவர்களது பெற்றோரிடமும் பேசப் பட்டது. இதையடுத்து, ஆர லூர் பள்ளியில் ஒருவரும், கோணுளாம்பள்ளம் பள்ளி யில் ஒருவரும், சிற்றுடையா நல்லூர் பள்ளியில் ஒருவ ரும், அணைக்கரை பள்ளி யில் ஒருவரும், திருப்பனந் தாள் பள்ளியில் மூவரும், மனகுன்னம் பள்ளியில் இரு வரும் என 10 பேர் உடனடி யாக சேர்க்கப்பட்டனர். மற்ற குழந்தைகள் அவரவர் விருப் பப்படி தொடர்ந்து கல்வி பயில ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இக்களப் பணியில் திருப்பனந்தாள் வட்டார வளமைய மேற்பார்வையா ளர் (பொ) வேலவன், ஆசி ரியர் பயிற்றுநர்கள், சிறப்பா சிரியர்கள், மாவட்ட குழந் தைகள் பாதுகாப்புத் துறை உறுப்பினர் ஹரிஹரன் மற் றும் பள்ளித் தலைமையாசிரி யர்கள் பங்கேற்றனர்.
ஒரத்தநாடு
ஒரத்தநாடு ஒன்றியம் மேல உளூர் ஊராட்சியில் நரிக்குறவர் காலனி குடி யிருப்பில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்லாத 37 தொடக்க நிலை குழந்தை கள் இருப்பதாக அண்மை யில் நடத்தப்பட்ட கள ஆய் வில் தெரியவந்தது. இதை யடுத்து, அந்த குழந்தை களுக்கு கல்வி வசதி ஏற் படுத்த மேல உளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பயிற்சி மையம் ஏற் படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, சிறப்பு பயிற்சி மையத்தில் நரிக் குறவர்களின் குழந்தை கள் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து, அந்த மாண வர்களுக்கு பாடப் புத்தகங் கள், புத்தகப் பை, வண்ண பென்சில்கள், சீருடை போன்றவற்றை வழங்கி, இக்குழந்தைகளின் கல்வி எதிர்காலத்தில் எந்த இடை யூறுமின்றி மேம்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தொடர்ந்து, மேலஉளூர் மேற்கு கிராமத்தில் நீண்ட நாட்களாக பட்டா இன்றி வாழ்ந்து வந்த விளிம்பு நிலையில் உள்ள 16 குடும் பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாவையும் ஆட்சியர் வழங்கினார்.