தஞ்சாவூர், டிச.23- திருஆரூரான் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு வெள்ளியன்று, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். கரும்பு விவசா யிகள் சங்க பொதுச் செயலாளர் டி.திருப் பதி, தலைவர் பி.ராமசாமி, செயலா ளர் பி.கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத் தில் தமிழக காவிரி விவசாயிகள் பாது காப்பு சங்க செயலாளர் சுந்தர.விமல்நாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் தெற்கு மாவட்டச் செயலாளர் முத்து.உத்திராபதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். தஞ்சாவூர் மாவட்டம் திரு மண்டங்குங்குடியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளை மோசடி செய்துள்ளது. விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வா கம் வங்கிகளில் வாங்கிய கடனை உட னடியாக ஆலை நிர்வாகம் செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு வங்கி தரப்பில் கடன் இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு வர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகை, வாகன வாடகை, வெட்டுக் கூலி உள்ளிட்ட அனைத்து தொகை களையும் உடனே வழங்க வேண்டும். திருமண்டங்குடியில் கோரிக்கை களை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை ஏமாற்றிய திருமண்டங் குடி சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி னர்.