districts

சிலைகளை திருடியவர்கள் கைது

பேராவூரணி, டிச.23-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே  திருச்சிற்றம் பலம் புராதனவனேஸ்வரர், விளங்குளம் அட்சயபுரீஸ்வரர், மேற்குடிக்காடு தான்தோன்றி அம்மன் கோவில்களின் சாமி  சிலைகள் திருடு போயின. இதுகுறித்து அந்தந்த கோவில் நிர்வாகம் மூலம் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு, சிலை திருட்டுக் கும்பலை தேடி வந்தனர்.  இந்நிலையில், எட்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த சரவ ணன் (25) என்பவர் சிலை திருட்டுக்கு மூளையாக செயல் பட்டது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து நடத்திய  விசாரணையின் அடிப்படையில்,  வேலவன் (25), நந்த குமார் (27), சபரி (23), மணியரசு (26),. வினோத் (27),செல்வ கணபதி (24), அமிர்தராஜ் (27), பிரபாகரன் (28) ஆகி யோரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிட மிருந்த ஒரு வெள்ளி, 5 வெண்கலம் உட்பட 6 சிலை களை மீட்டனர்.   கும்பல் சிலைகளை  திருடிய கிராமங்களிலேயே பணத்தை  பெற்றுக்கொண்டு கொடுக்கும் நூதன முயற்சியில் ஈடு பட்டது தெரியவந்தது. மேலும், சிலை திருட்டு கும்பலை சேர்ந்த சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.