districts

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க நெசவாளர்களுக்கு ரூ.4.56 கோடி போனஸ் 67-வது பொது பேரவையில் தீர்மானம்

கும்பகோணம், அக்.18- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் திகோ சில்க்ஸ்  என்று அழைக்கப்படும் திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது.  இந்தியாவிலேயே தொடர்ந்து 67 ஆண்டு களாக லாபத்தில் இயங்கி வரும் ஒரே சங்க மான திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு  சங்கத்தின் 67-வது பொது பேரவை கூட்டம்  சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. சங்கத்தின்  தலைவர் ஜி. தியாகராஜன் தலைமை வகித் தார். இயக்குனர்கள் மற்றும் அங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்த 2021 - 22 ஆம் ஆண் டிற்கு ரூ.56.38 கோடி விற்பனை செய்யப் பட்டு ரூ.7.52 கோடி லாபம் ஈட்டி, சங்க அங் கத்தினர்களுக்கு அவர்கள் பெற்ற மொத்த கூலியில் ரூ.51.85 பைசா போனசாகவும், அங்கத்தினர்களின் பங்குத்தொகைக்கு ஈவுத் தொகையாக 14 சதவீதமும் சேர்த்து போனஸ் மற்றும் டிவிடெண்ட்க்கான கூடுதல் தொகை ரூ.4.56 கோடியை அங்கத்தினர் களுக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட் டது. மேலும், சங்க வளர்ச்சியினை கருத்தில் கொண்டும் அங்கத்தினர்களின் வாழ்வாதாரத தினை கருத்தில் கொண்டும் சில தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. அங்கத்தினர் களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மேலாண்மை இயக்குநர் செல்வம் விளக்கம்  அளித்தார்.