districts

திருவையாறு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்

தஞ்சாவூர், ஜன.13-  திருவையாறு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த, இதுவரை  புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஹமீதா நகரில் (யூனியன் பிஸினஸ் பார்க்)  என்ற தனியார் நிதி நிறுவனத்தை கடந்த 2016-ஆம் ஆண்டு ஜாபர் அலி என்பவர் நடத்தி  வந்தார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த  தொகையை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி யதாக, தஞ்சாவூர் மானம்புச்சாவடியைச் சேர்ந்த அப்துல்ஹமீது அளித்த புகாரின் அடிப் படையில் மோசடி வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கு தற்போது தஞ்சாவூர் பொரு ளாதார குற்றப்பிரிவில் விசாரணை நடத்தப் பட்டு, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் நிலையில் உள்ளது. எனவே, இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாற்றமடைந்த, இதுவரை புகார் அளிக்காதவர்கள் உரிய ஆவணங்களுடன் தஞ்சாவூர் ராஜப்பா நகரில் உள்ள பொரு ளாதார குற்றப்பிரிவு காவல் அலுவல கத்தில் நேரில் ஆஜராகி புகார் அளிக்க லாம் என காவல் ஆய்வாளர் சுதா தெரி வித்துள்ளார்.