districts

img

திருவையாறு அரசுப் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

தஞ்சாவூர், ஜன.3- திருவையாறு அருகே அரசுப் பள்ளிக்கு திடீரென சென்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மாணவ, மாணவிகளுடன் உரையாடி, பள்ளிக்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 130 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்  நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தஞ்சாவூரில் இருந்து திரு வையாறு வழியாக சென்னை செல்வ தற்காக சென்றார். அப்போது, கண்டியூர் பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் அமைச்சர் நுழைந்த போது,  இறைவணக்க கூட்டம் நடந்து கொண்டி ருந்தது. பின்னர், மாணவர்கள் அமைச் சரை கை தட்டி வரவேற்றனர். பின்னர் மாண வர்களுடன் கலந்துரையாடி, அறிவுரை வழங்கினார். பள்ளிக்கு கூடுதல் இடம்  கேட்டு அமைச்சரிடம், பள்ளி தலைமையாசி ரியர் மனோகரன் கோரிக்கை வைத்தார்.