தஞ்சாவூர், மார்ச் 3- தமிழ்நாடு முழுவதும் திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு வின் கருத்து கேட்பு நிறைவு பெற்றது என்றார் அக்குழுவின் உறுப்பினரும், திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்புத் தலைவ ருமான டி.கே.எஸ். இளங்கோ வன். மக்களவைத் தேர்தலை யொட்டி, தஞ்சாவூரில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயி லாடுதுறை ஆகிய மாவட்டங்களுக் கான தேர்தல் அறிக்கை தயா ரிக்கும் குழு கருத்து கேட்புக் கூட் டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், டி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் தில்லி சிறப்பு பிரதி நிதியும், திமுக விவசாய அணிச் செயலருமான ஏ.கே.எஸ்.விஜ யன், சென்னை மேயர் பிரியா உள் ளிட்டோர் பங்கேற்று ஏராளமானோ ரிடம் மனுக்களைப் பெற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் தெரிவித்ததாவது: திமுக தேர்தல் அறிக்கை மக்க ளின் எண்ணங்களைப் பிரதிபலிப்ப தாக இருக்க வேண்டும் என்பதற் காக மக்களிடமே கேட்டு, அவர்களு டைய தேவையை அறிந்தோம்.
இந்த மனுக்கள் பெறுதல் சுற்றுப் பயண நிகழ்வு நிறைவடைந்தது. இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை முதல் ஒன்றிணைந்து மனுக்களை பரிசீலித்து, தேர்தல் அறிக்கையில் இணைப்போம். பெரும்பாலான மனுக்கள் ரயில், விமானப் போக்குவரத்து, ஜிஎஸ்டியால் வணிகர்கள் சந்திக் கும் சிரமங்கள், கால்வாய்கள், ஆறு, குளங்களை தூர்வாருதல் உள்ளிட்ட உள்ளூர் பிரச்சனை களை மையப்படுத்தி வந்துள்ளன.
மாநிலங்கள் வஞ்சிக்கப்படு கின்றன என்பதுதான் இத்தேர்த லின் முக்கியமான கருப்பொரு ளாக இருக்கும். ஜிஎஸ்டி வரி விதிப் பில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநி லங்களுக்கு, குறைவான பங்க ளிப்பு செய்வது, வளர்ந்து வரும் மாநிலங்களுக்கு இழைக்கப் படும் துரோகம். எனவே, ஜிஎஸ்டி விதிப்பில் சரியான திருத்தங்களை யும், மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும். இந்திய மக்களை பிரதமர் ஏமாற்றி வருகிறார் என்பதற்கு மிகப்பெரிய பட்டியலை எங்களால் சொல்ல முடியும்.
அவர் கூறிய எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை. அதனால்தான் தில்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், செ.ராமலிங்கம், சட்டப் பேரவை உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம், பூண்டி கே.கலைவா ணன், கா.அண்ணாதுரை, என்.அசோக்குமார், மேயர் சண்.ராம நாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.