தஞ்சாவூர், டிச.10 - பேராவூரணி அருகே உள்ள கைவன வயல் பாசன ஏரியை தூர்வார வேண்டு மென இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை அரசுக்கு விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. கைவன வயல். இப்பகுதியில் கைவனவயல் ஏரி என்ற பெரிய ஏரி உள்ளது. சுமார் 25 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த ஏரியின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங் கள் பாசன வசதி பெறுகின்றன. கடைமடை பகுதியான இப்பகுதி விவசாயிகள், இந்த ஏரியின் நீர்ப்பாச னத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்கின்றனர். இந்த ஏரியை பொதுப் பணித்துறை அதிகாரிகள் முறையாக தூர்வாரி சீரமைக்காமல் உள்ளனர். இதனால் ஏரி முழுவதும் நெய்வேலி காட்டாமணக்கு, கோரைப்புற்கள், ஆகாயத்தாமரை, காட்டாமணி செடி கள் வளர்ந்து புதர்போல் மண்டிக் கிடக் கிறது. செடி, கொடிகள் ஏரி முழுவதும் நிறைந்து காணப்படுவதால், தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் நீண்ட காலமாக தூர்வாரப் படாததால் கரை எது, தரை எது என்று தெரியாத அளவிற்கு மண்மேடிட்டு காணப்படுகிறது. ஏரியின் ஒருபுறம் மட்டுமே ஓரளவு மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் விவசாயம் செய்யும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே, விவசாயிகள் நலன் கருதி இந்த ஏரியில் உள்ள செடி, கொடிகளை அகற்றி ஏரியை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்த வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ள னர்.