districts

img

பயணி தவறவிட்ட நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு

கும்பகோணம், நவ.6- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரத்தை அடுத்துள்ள ரகுநாத புரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணன் (61). இவரது ஆட்டோவில், தோப்புத் தெரு வைச் சேர்ந்த காதர் முகைதீன் மனைவி ஹபிமா என்பவரை சோழபுரம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார். அவர்கள் பேருந்தில் ஏறி சென்ற நிலை யில், ஆட்டோவில் பயணிகள் அமரும் சீட் பகுதியில், தங்க நகை இருப்பது தெரிய வந்தது.  அதனை எடுத்துக் கொண்டு, சோழ புரம் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ரமே ஷிடம் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணன் ஒப்ப டைத்தார். அந்த நகையை பரிசோதித்த போது, அது 13 கிராம் எடை கொண்ட கை செயின் என்பது தெரியவந்தது. இதை யடுத்து ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில், ஆட்டோவில் பயணம் செய்த குடும்பத்தினருக்கு தகவல்  அளிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் நகையை ஒப்படைத்தனர். நகையை பெற்றுக் கொண்ட பயணி நன்றி தெரி வித்தார். நேர்மையாக நடந்து கொண்ட ஆட்டோ  ஓட்டுநர் கிருஷ்ணனுக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டி பரிசு வழங்கி னர்.