districts

img

விளிம்பு நிலை மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவாரா தஞ்சாவூர் ஆட்சியர்?

தஞ்சாவூர், பிப்.1-  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியம், ரெங்க நாதபுரம், மணக்குடி ஏரித்தெருவில் நீண்ட காலமாக குடியிருந்துவரும் விளிம்பு நிலை  மக்களை குடியிருப்புகளிலிருந்து விரட்ட ரியல் எஸ்டேட் நடத்தி வரும் நபர் ஒரு வர் வெளியேற்ற முயற்சிக்கிறார்.  இந்தப் பகுதியில் வசித்து வரும் 37 குடும்பத்தினருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 24-ஆம் தேதி வட்டாட்சிய ரால், (நத்தம் புல எண் 152-3-இல்) இல வச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட் டுள்ளது. ஆனால், நிலத்தை அளந்து கொடுக்கவில்லை. ரியல் எஸ்டேட் நடத்துபவரின் மிரட்டல் அதிகரித்து வரும் நிலையில் நிலத்தை அளவீடு செய்து கொடுக்கக் கோரியும், நெடுஞ்சாலை நெருக்கடியிலிருந்து மக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி. கண்ணன், அம்மாப்பேட்டை ஒன்றியக்குழு உறுப்பினர் கே.முனியாண்டி ஆகியோர் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் மனு அளித்தனர்.