districts

img

மாற்றுத்திறனாளிகளை வங்கி நிர்வாகம் அலைக்கழிக்கக் கூடாது ஒரத்தநாடு ஒன்றிய முதல் மாநாடு வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஏப்.27 - தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் ஒரத்த நாடு ஒன்றிய முதல் மாநாடு தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வீரரெத்தினா திரு மண மண்டபத்தில் ஒன்றியத் தலை வர் டி.கஸ்தூரி தலைமையில் நடை பெற்றது. எஸ்.கவிதா வரவேற்றார். மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசினார். ஒன்றியச் செயலாளர் யு.பிர பாகரன் வேலையறிக்கை வாசித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் என்.சுரேஷ்குமார், மாற்றுத்திற னாளிகள் சங்க மாவட்ட துணைச் செய லாளர் வி.எம்.செந்தில்குமார், கும்ப கோணம் நகரப் பொறுப்பாளர் பழ. அன்புமணி ஆகியோர் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். நிறைவாக, மாநில  துணைத் தலைவர் டி.கணேசன் புதிய  நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்துப் பேசினார்.  மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றியத் தலைவராக டி.கஸ்தூரி, செய லாளராக யு.பிரபாகரன், பொருளாள ராக காளிமுத்து, துணைத் தலைவர் களாக கிருஷ்ணன், பழனியம்மாள், துணைச் செயலாளர்களாக கவிதா,  சிவக்குமார் உள்ளடக்கிய 15 பேர் கொண்ட ஒன்றியக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டது.  தொழில் செய்ய வங்கிக் கடன் கேட்டு வரும் மாற்றுத்திறனாளிகளை, வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்காமல், தகுதியுள்ளவர்களுக்கு சுய தொழில் தொடங்க வங்கிக் கடன் வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத் தில் மாற்றுத்திறனாளிகளை கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டுமென வற்புறுத்தும் போக்கை கைவிட வேண்டும். ஊனமுற்றோருக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3  ஆயிரம், கடுமையாக ஊனமுற்றோ ருக்கு மாதாந்திர உதவித் தொகை ரூ.5  ஆயிரம் வழங்க வேண்டும். அரசு அலு வலகங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படும் வகையில் சாய்தள படிக் கட்டுகள், கழிப்பறை வசதி செய்து தர  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் மாவட்ட பொருளாளர் சிவ ப்ரியா, மாவட்ட துணைச் செயலாளர் கிறிஸ்டி, மாவட்ட துணைத் தலைவர் சங்கிலிமுத்து, பட்டுக்கோட்டை ஒன்றிய  நிர்வாகிகள் ஜெயபால், கோபி, மதுக்கூர்  ஒன்றியத் தலைவர் பாலசுப்பிரமணி யன், ஒன்றியச் செயலாளர் சந்திர பிரகாஷ், திருவோணம் ஒன்றியத் தலை வர் திருமேனி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.