districts

தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் 162-வது ஆண்டு தொடக்க விழா

தஞ்சாவூர், டிச.2-  தஞ்சாவூர் ரயில் நிலையத்தின் 162-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி பயணிகளுக்கு இனிப்பு வழங்கி ரயில் பயணிகள் சங்கத்தினர் கொண்டாடினர். தமிழகத்தின் மிகப் பழமையான ரயில் நிலையங்களில் தஞ்சாவூர் ரயில் நிலையமும் ஒன்றாகும். தஞ்சாவூர் ரயில் நிலையம் கடந்த 2-12-1861-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரயில் சேவை வழங்கி வருகிறது. வெள்ளியன்றுடன் தஞ்சாவூர் ரயில் நிலையம் தொடங்கி 161 ஆண்டுகள் முடிவடைந்து 162-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனைக் கொண்டாடும் வகையில், வெள்ளியன்று காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கம் சார்பில் தலைவர் நடராஜன், செயலாளர் வெ.ஜீவக்குமார், பாபநாசம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் சோமநாதராவ், செயலாளர் டி.சரவணன், தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்க பொருளாளர் மாறன் ஆகியோர் தலைமையில் பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் ரயில் நிலைய மேலாளர் சம்பத்குமார், ரயில்வே முதன்மை வணிக ஆய்வாளர் தங்க.மோகன் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சியில், ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கண்ணன், வழக்கறிஞர்கள் உமர் முக்தர், முகமது பைசல், பேராசிரியர்கள் திருமேனி, செல்ல கணேசன், சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;