districts

img

பூம்புகார் மாநில விருதுக்கு தஞ்சாவூர்  நெட்டி கைவினை கலைஞர் தேர்வு

தஞ்சாவூர், ஏப்.10- பூம்புகார் மாநில விருதுக்கு தஞ்சாவூர் நெட்டி கைவினைக் கலைஞர் ஆர்.ராதா  (66) தேர்வு செய்யப் பட்டுள்ளார். தமிழ்நாடு கைத் திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம் சார்பில், ஆண்டுதோறும் சிறந்து விளங்கும் கைவினைக் கலைஞர் களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இதன்படி 2021-2022-ஆம் ஆண்டுக்கான பூம்புகார் மாநில விருதுக்காக தஞ்சாவூர் நெட்டி கைவினைக் கலைஞர் ஆர்.ராதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவ்விருது தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லினால் ஏப்ரல் 13-ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள, தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சி கழக அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளதாக உதவி மேலாளர் எம்.கே.விஜயகுமாரி தெரிவித்துள்ளார்.