தஞ்சாவூர், ஜன.29- தஞ்சாவூர் தெற்கு வீதியில் பொலிவுறு நகரத் திட்டப் பணியை மேயர் சண்.ராமநாதன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தஞ்சாவூரில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகள் தொய்வாக நடைபெறு வதாக மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கூறினர். இதன் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டது. பொலி வுறு நகரத் திட்டப் பணிகளை வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிக்கும் வகையில் விரைவுபடுத்தி வருகிறோம். இப் போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. எனவே, அதிகபட்சமாக மார்ச் மாதத்துக்குள் அனைத்து பணி களும் முடிக்கப்பட்டுவிடும்’’ என்றார். அப்போது, மண்ட லக் குழுத் தலைவர் எஸ்.சி.மேத்தா, மாமன்ற உறுப்பி னர் ஜெ.வி. கோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.