தஞ்சாவூர், ஏப்.1- தஞ்சாவூர் மாநகராட்சியில் நிகழ் நிதி யாண்டுக்கான உபரி பட்ஜெட் கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையிலும், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணை யர் க. சரவணகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது- 2023 - 24 ஆம் ஆண்டுக்கான பட் ஜெட்டை கணக்கு குழுத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான சி.வெங்கடேஷ் தாக்கல் செய்தார். முன்னதாக, மேயர் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டிலேயே, தஞ்சாவூர் மாநக ராட்சி முதல் முறையாக அனைத்து கடன் களையும் அரசுக்கு திரும்பச் செலுத்தி, கட னில்லா மாநகராட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நிகழ் நிதியாண்டுக்கு (2023- 24) ரூ.4.41 கோடிக்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. இதில், ரூ.284.70 கோடிக்கு வரவு எதிர்பார்க்கப்பட்டு, ரூ.280.28 கோடிக்கு செலவு செய்ய திட்டமிடப் பட்டுள்ளது’’ என்றார்.