தஞ்சாவூர், மார்ச் 28- தஞ்சாவூர் மாநகராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மேயர் சண்.ராம நாதன் தலைமையில் துணை மேயர் அஞ்சு கம்பூபதி, ஆணையர் சரவணக்குமார் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கியதும் 17-ஆவது வார்டு தி.மு.க. உறுப்பினர் சந்திரசேகர மேத்தா; “ராஜவீதிகளில் விடுபட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பெரிய கோவில் தேரோட்டம், பச்சைக்காளி, பவ ளக்காளி போன்ற திருவிழா வருகிறது” என்றார். அ.ம.மு.க.வைச் சேர்ந்த 36 ஆவது வார்டு உறுப்பினர் கண்ணுக்கினியாள், “எனது வார்டு பகுதிகளில் உள்ள சாக்கடை களைச் சீரமைத்துத் தர வேண்டும். அவை யில் பெண் கவுன்சிலர்கள் அதிகளவில் உள் ளதால் ஆண் கவுன்சிலர்கள் இரட்டை அர்த்தத்தில், கண்ணியக் குறைவாக அவை யில் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். அ.தி.மு.க.வை சேர்ந்த 41-ஆவது வார்டு உறுப்பினர் மணிகண்டன், “மாநக ராட்சிப் பகுதிகளில் குப்பைகளை அள்ள அவுட்சோர்சிங் முறையில் டெண்டர் விடப் படும் என்ற தீர்மானத்தை ரத்துச் செய்ய வேண்டும். இதனால் பல்வேறு முறைகேடு கள் நடக்க வாய்ப்புள்ளது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், மாநகராட்சி யின் ஓராண்டு சாதனை புத்தகத்தில், செய்தித் தாள்களில் வெளியான செய்தி யை புத்தகமாக அச்சிட்டு மக்கள் வரிப் பணத்தை வீணடித்துள்ளதாக குற்றம்சாட்டி னார். இதற்கு தி.மு.க உறுப்பினர்கள் பலர் எதிர்ப்புத் தெரிவித்து கூச்சலிட்டனர். அப்போது, மேயர் அ.தி.மு.க. உறுப்பி னர்களைப் பார்த்து, “நீங்கள் ஓ.பி.எஸ்., அணியா, இ.பி.எஸ்., அணியா” எனக் கேட்டு கிண்டலடித்தார். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் உறுப்பினர் மணிகண்டன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகராட்சியில் உங்களின் ஒருவன் என ஓராண்டுச் சாதனை என்ற புத்தகம் சுமார் 55 ஆயிரம் பிரதி வெளி யிடப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய்க்கு மேல் புத்தகத்திற்காக செலவு செய்யப் பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சியின் திட்டப் பணிகள் குறித்தும், திட்ட மதிப்பீடு குறித்தும், ஓராண்டில் செய்யப்பட்ட பணி கள் குறித்தும் எதுவும் இடம் பெறவில்லை என்றார்.