நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், தஞ்சை மாநகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களாக 35 ஆவது வார்டில் எம்.வைஜெயந்திமாலா, 36 ஆவது வார்டில் இ. வசந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். அவர்கள் வியா ழக்கிழமை தஞ்சை மாநகராட்சி தேர்தல் அலுவலரிடம் தங்கள் வேட்பு மனுக்களை ஊர்வலமாக சென்று தாக்கல் செய்தனர். அப்போது கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் கோ. நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. செந்தில்குமார், என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, ஆர். கலைச்செல்வி, என்.சிவகுரு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் சாமி.நடராஜன், என்.சரவணன், என்.குருசாமி, எம்.மாலதி, மாநகர செயலாளர் எம்.வடிவேலன், 36 ஆவது வார்டு கிளை செயலாளர் கருணாநிதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.