districts

img

தஞ்சை காவல்துறை மோப்ப நாய்க்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

தஞ்சாவூர், ஜூன் 29-  தஞ்சாவூரில், வயது முதிர் வின் காரணமாக உயிரிழந்த காவல்துறை மோப்ப நாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையில் சீசர் என்ற பத்து வய துடைய மோப்ப நாய் கடந்த  10.3.2015 அன்று பணியில் சேர்ந்தது.

இந்த நாய் வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் பிரிவில் நிபுணத்துவம் பெற்றது. இதையடுத்து தமிழகத் தில் பிரதமர், முதல்வர் மற்றும்  முக்கிய விருந்தினர்கள் வருகை யின் போது, அவர்கள் செல்லக்கூடிய வாக னங்கள், அப்பகுதியில் நடைபெறும் மேடை  நிகழ்வுகளில் முன்னதாக வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என மோப்பம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூ ரிக்கு, காவல் துறையினர் சீசரைக் கொண்டு  சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்த போது சீசர் நாய் இறந்தது தெரியவந்தது. பின்னர், வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவு அலுவலகம் அருகே சீசர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ஆஷிஷ்ராவத், துணை காவல் கண்கா ணிப்பாளர்கள் ராஜா, நித்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். துப்பாக்கி குண்டுகள்  முழங்க நாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.