districts

தஞ்சை பெரியகோயில் திருவிழா: ஏப்.13 உள்ளூர் விடுமுறை

 தஞ்சாவூர், ஏப்.2 - தஞ்சை பெரிய கோயில் தேர்த் திருவிழாவையொட்டி ஏப்ரல் 13 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.  இதுகுறித்து, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில் சித்திரை தேர்த் திருவிழாவினை முன்னிட்டு ஏப்.13 (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு  அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர்  விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்படுகிறது.  மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்குப் பதிலாக 2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர்  மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறை  செலாவணி முறிச் சட்டம் 1881-இன் கீழ் வராது என்பதால் தஞ்சா வூர் மாவட்டக் கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கருவூலங்களும் குறிப்பிட்ட பணியா ளர்களுடன் இயங்கும்” என தெரிவித்துள்ளார்.