districts

img

பயிர் காப்பீட்டில் தஞ்சை விவசாயிகளுக்கு அநீதி விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக்.27- பயிர் காப்பீட்டில் தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு இழைத்திருக்கும் அநீதியை கண்டித்தும் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்ட விவசாயி களுக்கு இழப்பீடு கிடைக்க  நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தியும் தொடர் கனமழை யினால் நெல் கொள்முதலில்  ஈரப்பதம் 22 சதவீதமாக கால தாமதம் இன்றி உயர்த்திட வலியுறுத்தியும், நெல்லுக்  கான கொள்முதல் விலை யை உயர்த்தி வழங்கிட கோரி  யும், மழைக்காலம் தொடர்வ தால் நீர்நிலை வாய்க்கால் களை அனைத்தும் உடனடி யாக தூர்வாரிடக் கோரியும் தமிழ்நாடு விவசாய சங்க  திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் சார்பில் நாச்சி யார் கோவில் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் முரு கன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆனந்தன், ஸ்டீபன் மதி மாறன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்டச் செயலாளர் வி.கண்ணன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், சிபிஎம் திரு விடைமருதூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் பழனிவேல் ஆகியோர் கண்டன உரை யாற்றினர்.